திறைசேரி செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

0
173

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கத் தவறியதாகக் கூறி, திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 105(3) சரத்தின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மீது குற்றம் சுமத்த உத்தரவிடுமாறு அவர் குறித்த மனுவில் கோரியுள்ளார்.

மார்ச் 3 அன்று, உள்ளாட்சித் தேர்தல்-2023-ஐ நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட எந்த நிதியையும் திறைசேரி செயலாளரும் மற்ற அதிகாரிகளும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here