திறைசேரி செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கத் தவறியதாகக் கூறி, திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 105(3) சரத்தின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மீது குற்றம் சுமத்த உத்தரவிடுமாறு அவர் குறித்த மனுவில் கோரியுள்ளார்.

மார்ச் 3 அன்று, உள்ளாட்சித் தேர்தல்-2023-ஐ நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட எந்த நிதியையும் திறைசேரி செயலாளரும் மற்ற அதிகாரிகளும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...