எதிர்க்கட்சிகளுடன் 12 நாடுகளின் தூதுவர்கள் சந்திப்பு!

Date:

12 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று (22) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த விடயங்களைத் தெளிவுபடுத்தும் பிரதான நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறிப்பாக, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டல், அரசமைப்பைப் பாதுகாத்துக்கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குமாறு வெளிநாட்டுத் தூதுவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ்,  நியூசிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...