Monday, October 28, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24/03/2023

1.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த ஆண்டு வெசாக் பண்டிகை தேசிய அளவிலும் உள்ளூரிலும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

2.இலங்கையின் கடன் மறுசீரமைப்பில், சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள் 20 சதவீத முதன்மையான principal haircut க்கு உட்பட்டுள்ளனர், முதிர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் கூப்பன்கள் குறைக்கப்பட்டுள்ளதாதாகவும் பார்க்லேஸ் அறிக்கை கூறுகிறது – சர்வதேச நாணய நிதியத்தின் 03 பில்லியன் கடன் வசதி இறுதி கையொப்பமிட்ட பின்னர், முதலீட்டாளர்களின் கவனம் இலங்கையின் $13.4 பில்லியன் டாலர் மதிப்பை மறுசீரமைப்பதில் மாறியுள்ளது.

3.சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்காக வருடாந்தம் 4 வீத வட்டியும் மேலதிக கட்டணங்களும் செலுத்தப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியமபலபிட்டிய தெரிவித்துள்ளார்.

4.IMF அறிக்கையை ஏப்ரல் 3-வது வாரத்திற்குள் பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்: மேலும் IMF அறிக்கை தொடர்பாக யாருக்கேனும் ஏதேனும் சிக்கல் இருந்தால், அவர்கள் IMF உடன் பேசலாம் என்று கூறுகிறார். ஒப்புதல் இல்லாமல் அவர் 2வது சுற்று பேச்சுவார்த்தையை தொடர முடியாது.

5.சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

6.ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

7.இலங்கை கடற்பரப்பில் இருந்து வேட்டையாடும் இழுவை படகுகளை துரத்துவதற்கு கடற்படையினர் விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்: அனலைதீவு மற்றும் யாழ்ப்பாணம் கோவிலான் கடற்பரப்பில் வேட்டையாடிய 12 இந்திய பிரஜைகளுடன் 2 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

8.மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் பி.கே.ஜி.ஹரிச்சந்திரா கூறுகையில், கடன் தேக்கம் மற்றும் கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை தொடர்ந்து உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து அந்நிய செலாவணியை நிகர வாங்குபவராக மத்திய வங்கி தொடர்ந்து உள்ளது.
இந்த ஆண்டு இதுவரை சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் அந்நிய செலாவணியை வாங்கியுள்ளது: இதேவேளை
ஆயிரக்கணக்கான SMEகள் இறக்குமதி தடையால் தங்கள் வணிகங்கள் மூடப்பட்டுவிட்டதாக புலம்புகின்றனர்.

9.SL Airlines, SL Catering, SL Telecom, SL Insurance, Canwill Holdings (Grand Hyatt Hotel), Hotel Developers (Hilton Hotel), Litro Gas, Litro Gas Terminals மற்றும் Lanka Hospital ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விலக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது : மேலே உள்ள நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை ஆலோசனை சேவைகள் விரைவில் தொடங்கப்படும்.

10.தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.