இலங்கையில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர கூறியுள்ளார்.
மேலும், கடந்த 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 2,252 பதிவாகியுள்ளதாகவும், அதில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் வீட்டில் (1,420 வழக்குகள்) நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது போக்குவரத்து (261 வழக்குகள்), ஒன்லைன் தளங்கள் (192 வழக்குகள்), சாலைகள் (117 வழக்குகள்), பணியிடங்கள் (41 வழக்குகள்), பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகள் (20 வழக்குகள்), மத இடங்கள் (9 வழக்குகள்) மற்றும் பல்வேறு இடங்கள் (192 வழக்குகள்) ஆகியவை பிற இடங்களில் அடங்கும்.
பரவலான குறைவான அறிக்கையிடல் காரணமாக அந்த புள்ளிவிபரங்கள் பிரச்சினையின் உண்மையான அளவைக் குறைவாகக் குறிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு அப்பால், வீட்டு வன்முறை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இது தொடர்பில் ஆண்டுதோறும் சுமார் 130,000 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.
அத்துடன், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கும் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் உறுதி பூண்டுள்ளனர் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.