ரணில் அணி இன்று முன்னெடுக்கவுள்ள போராட்டம்

Date:

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை பாதாளத்தில் இருந்து மீட்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படுவதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கட்சி பேதமின்றி வெள்ளை ஆடை அணிந்து கலந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தேசிய கொள்கையொன்றை உருவாக்குமாறு கோரியே இந்த சத்தியாகிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...