இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு இந்திய கடன் – ஒவ்வென்றாக வெளிவரும் நிபந்தனைகள்

Date:

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்திவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன் பெட்டிகளை விடுவிக்க இந்தியாவின் கடனுவியை பயன்படுத்த சில இந்திய விநியோகஸ்தர்கள் விரும்பவில்லை என தெரியவருகிறது.

தமது பொருட்களுக்கான பணத்தை இந்திய ரூபாவில் செலுத்தாது, அமெரிக்க டொலர்களிலேயே செலுத்த வேண்டும் என இந்திய விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து அத்தியவசிய பொருட்கள், மருந்து ஆகியவற்றை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் அண்மையில் இந்தியாவிடம் கடன் வசதியை பெறும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

இதனையடுத்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க இந்தியா வழங்கியுள்ள இந்த கடனுதவியை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும் இந்தியாவின் இந்த கடன் வசதியை நடைமுறைப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை முழுமைப்படுத்த வேண்டியுள்ளதாக அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

சில இந்திய விநியோகஸ்தர்கள், தமக்கு செலுத்த வேண்டிய பணத்தை அமெரிக்க டொலர்களில் செலுத்துமாறு கோரியிருப்பதால், எதிர்வரும் காலத்தில் இறக்குமதி தொடர்பான சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும் எனவும் அச்சங்கம் கூறியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...