கைத்தொழிலாளர்களுக்கு எரிபொருள் சலுகை

0
21

கைத்தொழிலாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் செயலாளர் ஜே. எம். திலக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, 400 லிட்டருக்கு குறைவான எரிபொருள் தேவையுள்ள கைத்தொழிலாளர்கள், தங்களது பிரதேச செயலாளரின் அனுமதியுடன் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், லங்கா பெற்றோலியம் பரிந்துரையின் அடிப்படையில் 400 முதல் 6600 லிட்டர் வரை எரிபொருள் தேவையுள்ள கைத்தொழிலாளர்கள், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் பெற முடியும்.

400 லிட்டருக்கு மேற்பட்ட எரிபொருள் தேவையுள்ள கைத்தொழிலாளர்கள், தங்களது கோரிக்கையை நேரடியாக கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here