Thursday, April 25, 2024

Latest Posts

மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC தலைவர்

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் காணப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் தேவையில்லாமல் எரிபொருளை சேமித்து வைப்பதே வரிசையில் நிற்பதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான மக்கள் கூட்டம் காணப்படுவதனால் எரிபொருள்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் அந்த வரிசைகள் முடிவுக்கு வரும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐஓசியின் எரிபொருள் விலை அதிகரிப்பும் எரிபொருள் வரிசைக்கு மற்றொரு காரணம். இதன் காரணமாக IOC வாடிக்கையாளர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வருவதாகவும் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.