சம்பிக்கவின் ஜனாதிபதி கனவு

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம, பனாகொட கெரமுல்லையில் கடந்த கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணவக்க மேலும் கூறியதாவது:

ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டிற்கு ஒருமித்த நடவடிக்கை’ கொள்கை அறிக்கை குறித்து தற்போது பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் குழுக்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

மேலும் எதிர்காலத்தில் அரசியல் கூட்டணியை அமைக்க உள்ளோம். இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல தேசத்தைக் கட்டியெழுப்பும் கூட்டணி. அந்த கூட்டணியின் வேட்பாளராக என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் சொன்னால், அந்த சவாலை ஏற்றுக்கொள்வேன்.

என்னிடம் ஒரு குழு உள்ளது. என்னால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...