சம்பிக்கவின் ஜனாதிபதி கனவு

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம, பனாகொட கெரமுல்லையில் கடந்த கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணவக்க மேலும் கூறியதாவது:

ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டிற்கு ஒருமித்த நடவடிக்கை’ கொள்கை அறிக்கை குறித்து தற்போது பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் குழுக்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

மேலும் எதிர்காலத்தில் அரசியல் கூட்டணியை அமைக்க உள்ளோம். இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல தேசத்தைக் கட்டியெழுப்பும் கூட்டணி. அந்த கூட்டணியின் வேட்பாளராக என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் சொன்னால், அந்த சவாலை ஏற்றுக்கொள்வேன்.

என்னிடம் ஒரு குழு உள்ளது. என்னால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை...

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...