தேசிய பாதுகாப்பில் உறுதி செய்யப்படும் – ரணில்

Date:

இலங்கை கிறிஸ்தவர்கள் மிகுந்த மரியாதையுடன் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகையின் போது, ​​கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களுக்கு இடமளிக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தனது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“.. இயேசு கிறிஸ்து தீமையை தோற்கடித்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூர்ந்து ஈஸ்டர் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இயேசுவின் துன்பம், மரணம், உயிர்த்தெழுந்த 40 நாட்களை நினைவுகூரும் கிறிஸ்தவ பக்தர்கள், ஈஸ்டர் பண்டிகையில் விரதமிருந்து ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்டு, ஒரு நாடாக நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் அதைத் தாங்கக்கூடிய ஒரு தேசமாக, அந்த மறுமைப் பயணத்தின் ஆசீர்வாதத்துடன் நாம் மீண்டும் எழ வேண்டும்.

பல்லின சமூகமாக வாழும் நாம் இன்று நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே இலங்கையர்களாகிய நாம் எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுடன், நாட்டை சேதப்படுத்தும் எந்தவொரு சதியிலும் சிக்காமல் நாட்டின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக புத்திசாலித்தனமாக எம்மை அர்ப்பணிப்பது எமது கடமையாகும்..”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...

ஷிரந்திக்கு FCID நாமலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03)...

வெலிகம பிரதேச சபை NPP வசம்

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தேர்வு செய்ய இன்று (02)...

BAW M8 அறிமுகம், 1,500 EV விநியோகம், TELD உடன் இணைவு – Browns EV எட்டிய முக்கிய மைல்கல்

LOLC குழுமத்திற்குட்பட்ட Brown & Company PLC இன் மின்சார இயக்கம்...