புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு இல்லை!

Date:

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் சர்வதேச தரத்திற்கு இணங்க புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கும் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதையும் (PTA ) அடிப்படையாக கொண்டே இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) உட்பட சர்தேச சமூகத்தின் அழுத்தத்தின் கீழ் அரசாங்கம் புதிய யங்கரவாத ஒழிப்பு சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது.

என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உட்பட பல கட்சிகள் ஏற்கனவே புதிய சட்டமூலத்தின் விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஆய்வு செய்த பின்னரே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் எங்களுடையதை விட மிகவும் கடுமையானவை . எனவே, தற்போதைய பதிப்பில் பெரிய மாற்றங்களைச் செய்ய மாட்டோம். சிறிய மாற்றங்கள் இருக்கலாம்,” எனவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....