முட்டை விலையை குறைத்தால் வெதுப்பக உற்பத்தி உணவுகளின் விலைகளும் குறையும்!

Date:

முட்டை விலையை ரூ.35 ஆக குறைத்தால் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் வருவதால், எதிர்வரும் ஓர், இரு வாரத்திற்குள் முட்டை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

உள்ளூர் சந்தையில் முட்டை விலை ஒரு வாரத்திற்குள் குறைய வேண்டும். அவ்வாறு முட்டை விலை குறைந்தால் பராட்டாவை தவிர்ந்து ஏனைய பொருட்களின் விலையை குறைக்க முடியும்.

வெதுப்பகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு இன்னும் ரூ.55 க்கு தான் முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. பெரும்பாலான சில்லறை கடைகளில் முட்டை இல்லை. சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுகிறது.

நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு காரணமாக மாத்திரம் வெதுப்பக தொழிலில் விலையை குறைக்க முடியாது எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...