வெட்டி அகற்றப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின் உயிர் பெற்றது

Date:

கேகாலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழுவொன்று உடலிலிருந்து வெட்டிப் பிரிக்கப்பட்ட கையை மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டு அவரது இடது கை துண்டிக்கப்பட்டுள்ளது.

கையின் துண்டிக்கப்பட்ட பகுதியை ஐஸ் கட்டியில் வைத்து கொண்டு வரப்பட்டு நள்ளிரவில் சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மயக்க மருந்து நிபுணர், செவிலியர் பணியாளர்கள், சுகாதார உதவிக் குழுக்கள், ரத்த வங்கி என ஏராளமானோரின் ஆதரவு இந்த சத்திரசிகிச்சைக்கு பெறப்பட்டுள்ளது.

திறமையான இலங்கை வைத்தியர்களின் முயற்சியால் இழந்த கை மீண்டும் உயிர்பெற்றது. இத்தகைய திறமையான மருத்துவர்கள் நாட்டின் பெருமைக்கு உரியவர்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...