ஜனாதிபதி ராஜினாமா செய்ய மாட்டார் -ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Date:

ஜனாதிபதி எந்த வகையிலும் ராஜினாமா செய்ய மாட்டார் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றம் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும் தானும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாக எதிர்க்கட்சியின் அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

இதற்கு பதிலளித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜனாதிபதிக்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளதாகவும் வீதிகளில் 75 ஆயிரம் 80 ஆயிரம் பேர் ஜனாதிபதியையும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுகின்றனர். எமக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதிக்கும் மக்கள் 69 லட்சம் வாக்குகளை வழங்கி தெரிவு செய்துள்ளனர்.  எதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். அத்துடன்  ஜனாதிபதி எந்த வகையிலும் பதவி விலக மாட்டார் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினருக்கு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அவையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...