Thursday, May 2, 2024

Latest Posts

கட்சிக்குள் தீ.. வெளிநாட்டில் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இந்த பயணத்தில் அவருடன் மேலும் ஒன்பது பேர் இணைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையிலேயே அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினர் கட்சிக்கு புதிய பதில் தலைவரை நியமித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உரிமை மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் தற்போது நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.