ஜனாதிபதி வேட்பாளருக்கான பிணை வைப்பு கட்டணம் 26 இலட்சம்

Date:

தேர்தல்களுக்கான பிணை வைப்பு கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைகள் சட்ட விதிகளின்படி, தற்போதைய பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்றவாறு பிணை வைப்பு கட்டணத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட பிணை வைப்பு கட்டண திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்சி ஒன்றிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பிணை வைப்புத்தொகை 26 இலட்சமாகவும், சுயேட்சையாக ஜனாதிபதி வேட்பாளருக்கு 31 இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 16,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 6,000 ரூபாவாகவும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...