புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Date:

எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 300 ரூபாவினால் குறைத்து புதிய விலை 850 ரூபாவாகும்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 375 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெள்ளை பூண்டு 15 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 680 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.

அத்துடன் சிகப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...