மேர்வினுக்கு இன்றும் பிணை இல்லை

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்ல பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் மூன்று பேரை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதே சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...