23 வயது யுவதியின் மர்ம மரணம்

0
118

அவிசாவளை பகுதி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வலப்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதி நேற்று (10) மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த யுவதி நேற்று மாலை நபர் ஒருவருடன் குறித்த விடுதியில் தங்கியிருந்த நிலையில், மயங்கி விழுந்ததாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here