கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பஸ் : 6 சிறுவர்கள் உயிரிழப்பு!

Date:

பாலர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று விபத்தில் சிக்கியதில், 6 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சோக சம்பவமொன்று இன்று (11) காலை ஹரியானாவில் பதிவாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் நர்னால் பகுதிக்கருகில் உள்ள கிராமத்திலுள்ள மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 6 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 12 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயதடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜி.எல் பப்ளிக் (GL Public School) பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றுக்கொண்டுச் சென்ற குறித்த பாடசாலை பஸ், கனினாவின் உன்ஹானி கிராமத்துக்கருகில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின்போது பஸ்ஸின் சாரதி குடிபோதையில் இருந்தாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், ரம்ஜான் தினமான இன்று விடுமுறை அளிக்காமல், பாடசாலை நடத்தப்பட்டமை குறித்தும், பாடசாலை நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான பாடசாலை பஸ்ஸின் தகுதிச்சான்றிதழ் 2018 ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...