இலங்கையில் பெற்றோல், டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தி சற்றுமுன் வௌியானது விசேட அறிவிப்பு

Date:

இன்று நண்பகல் 1 மணிக்கு பின்னர் வாகனங்களுக்கு பெற்றோல், டீசல் விநியோகிக்கும் அளவு மட்டுப்படுத்தப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபாவிற்கும் கார், ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கும் மாத்திரம் பெற்றோல் டீசல் விநியோகிக்கப்படும்.

பஸ், அத்தியாவசிய தேவை வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது.

இதேவேளை, தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது பெற்றோல் வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்திலும் பெற்றோல் மற்றும் டீசலுக்கு வாகனங்கள் மணித்தியாலக் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...