காலியில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

Date:

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடல்ல பகுதியில் நேற்று (ஏப்ரல் 15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 36 வயதுடையவர் மற்றும் காயமடைந்தவர் 18 வயதுடையவர். இவர் தடல்ல பகுதியைச் சேர்ந்தவர்.

தடல்லா பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, இரவு நேரத்தில் நடைபெற்ற டி.ஜே. இசை பார்த்துக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு வந்துள்ளதாகவும், உயிரிழந்த சந்தேகநபர்களுக்கு இடையில் சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்தவரின் உறவினர் என்பதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் டொலர் இருப்பு வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையின்படி, இலங்கையின் அதிகாரப்பூர்வ...

தேசிய பட்டியல் வெற்றிடம் பூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத்...

லஞ்சம் பெற முயற்சித்த முக்கிய புள்ளி கைது

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...