நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை முன்னேற்றி வருகிறது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
“எமது நாட்டின் முக்கியமான பண்பாட்டு திருவிழாவான புத்தாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில், நாடாகவும் உலகளாவிய அளவிலும் பல சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஒரு புறம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை உள்ளது. அந்தப் போர் தொடர்ந்தாலும் அல்லது முடிந்தாலும், அதன் தாக்கம் இன்னும் சில மாதங்கள் நீடிக்கும். அதேபோல், நாம் எதிர்கொண்ட ‘டிட்வா’ புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களும் உள்ளன.
இவ்வாறான சவால்கள் மத்தியிலும், நாம் தளராமல் நிலைத்தன்மையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (15) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
