காலி முகத்திடலில் பொது நிகழ்வுகள் நடத்த கதவடைப்பு

Date:

சமய நிகழ்வுகள் தவிர்ந்த இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகளுக்கு காலி முகத்திடல் வளாகத்தை வழங்குவதில்லை என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

அதன்படி கடந்த 20ம் திகதி முதல் இந்த முடிவு அமலுக்கு வந்துள்ளது.

மக்கள் சுதந்திரமாக நேரத்தை செலவிடும் வகையில் காலி முகத்திடல் வளாகத்தின் அழகை பேணுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக, துறைமுக அதிகாரசபை காலி முகத்திடல் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, அதிகாரசபையால் ரூ. 220 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன் கடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சொத்து சேதங்களை மீட்பதற்காக ரூ. 6.6 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...