காலி முகத்திடலில் பொது நிகழ்வுகள் நடத்த கதவடைப்பு

Date:

சமய நிகழ்வுகள் தவிர்ந்த இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகளுக்கு காலி முகத்திடல் வளாகத்தை வழங்குவதில்லை என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

அதன்படி கடந்த 20ம் திகதி முதல் இந்த முடிவு அமலுக்கு வந்துள்ளது.

மக்கள் சுதந்திரமாக நேரத்தை செலவிடும் வகையில் காலி முகத்திடல் வளாகத்தின் அழகை பேணுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக, துறைமுக அதிகாரசபை காலி முகத்திடல் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, அதிகாரசபையால் ரூ. 220 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன் கடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சொத்து சேதங்களை மீட்பதற்காக ரூ. 6.6 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...