காலி முகத்திடலில் பொது நிகழ்வுகள் நடத்த கதவடைப்பு

Date:

சமய நிகழ்வுகள் தவிர்ந்த இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகளுக்கு காலி முகத்திடல் வளாகத்தை வழங்குவதில்லை என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

அதன்படி கடந்த 20ம் திகதி முதல் இந்த முடிவு அமலுக்கு வந்துள்ளது.

மக்கள் சுதந்திரமாக நேரத்தை செலவிடும் வகையில் காலி முகத்திடல் வளாகத்தின் அழகை பேணுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக, துறைமுக அதிகாரசபை காலி முகத்திடல் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, அதிகாரசபையால் ரூ. 220 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன் கடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சொத்து சேதங்களை மீட்பதற்காக ரூ. 6.6 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...