Friday, May 3, 2024

Latest Posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் அவசியம் – அரவிந்தகுமார் தெரிவிப்பு!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்

பத்தரமுல்ல இசுருபாயவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதைய சூழ்நிலைக்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அல்ல 2000 ரூபா வழங்கினால் கூட அது போதாது. எனவே குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 2000 ரூபா வழங்கப்பட வேண்டும்.

200 ரூபா சம்பள அதிகரிப்புக்கே கம்பனிகள் தயாராக உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது. குறைந்தபட்சம் ஆயிரத்து 1700 ரூபாவது அவசியம் கிடைக்கவேண்டும். 2000 ரூபாவுக்கு மேல் செல்லவேண்டும் .

பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றது முதலே நஷ்டம் என்ற புராணத்தை கம்பனிகள் பாடிவருகின்றனர். இலாபம் இல்லையேல் தோட்டங்களை அரசிடம் கையளிக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வாறு கையளிக்கப்படுவதில்லை. காரணம் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்கவில்லை என தெரிவித்தார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.