விஜேதாசவின் எம்பி பதவியில் கை வைக்கும் மொட்டு!

Date:

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் போதே சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராவது பாரதூரமானதொரு நிலை என்றும், அதற்கு கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இன்று (22) தெரிவித்தார்.

அவரது கட்சி உறுப்புரிமை குறித்து இன்று முடிவு எடுக்கப்படவுள்ளதாக பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விஜேதாச ராஜபக்ஷ மிகத் தெளிவாகத் தவறிழைத்துவிட்டதாகத் தெரிகிறதென்றும், விஜேதாச ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கட்சி உறுப்புரிமையை இழந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...