அக்குரணை பள்ளிவாசல் மீது தாக்குதல் எச்சரிக்கை ; பொய்யான தகவல் வழங்கிய மௌலவி கைது!

Date:

அக்குரணை  மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக 118 என்ற அவசர தொலைபேசி இலகத்துக்கு இரண்டு முறை பொய்யான அழைப்புகளை விடுத்த 21 வயதான மௌலவி மே 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து சைபர் குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஹரிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேகநபர், தான் வழங்கிய தகவல் போலியானது என பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேக நபர் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இவ்வாறு இரண்டு பொய்யான அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இவரின் போலியான எச்சரிக்கையை அடுத்து அக்குறணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...