இடி, மின்னலுடன் கடும் மழை பெய்யுமென 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Date:

கடுமையான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா , வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இவ்வாறு கடும் மழை பெய்யக்கூடும்.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

எனவே, பொதுமக்கள் மழை மற்றும் இடி, மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய 19 மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்...

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்...

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...