பாராளுமன்றத்தில் இன்று முக்கிய வாக்கெடுப்பு

Date:

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முழுமையான கடன் வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மீதான விவாதம் மூன்றாவது நாளாகவும் இன்று (28) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

அந்த விவாதத்தின் முடிவில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த உடன்படிக்கைகளுக்கு எதிராக தற்போது பல எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் வாக்களிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த பிரேரணை மிகவும் முக்கியமானது, ஏனெனில் IMF திட்டத்தை தொடர தற்போதைய அரசாங்கம் நாட்டிலிருந்து எவ்வளவு ஆதரவைப் பெறுகிறது என்பதை இது தெளிவாகக் காட்டும். ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் அதிக பலம் இல்லாததால், எதிர்வரும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறாவிட்டால் நிலைமை மிகவும் சிக்கலானதாகிவிடும்.

இந்த விவாதத்தின் போது அல்லது வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அமைச்சரவை மாற்றம் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்படுவதால், அவர்கள் அரசாங்கத்துடன் இணையாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் இரண்டு கருத்துக்கள் நிலவுவதுடன், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தொடர்பில் ராஜபக்சக்கள் உடன்பட முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் அரசாங்கம் பெற்றுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை இன்று கிடைக்குமா என்பது சந்தேகமே.

இதன்படி, எதிர்க்கட்சியில் இருந்து ஒரு குழுவினர் அரசாங்கத்துடன் இணைவார்களா, அரசாங்கத்தில் இருந்து ஒரு குழு பிரிந்து செல்வதா, எதுவுமே நடக்காது, வழமை போன்று அரசாங்கத்தின் பெரும்பான்மை பாதுகாக்கப்படுமா என்பதை இன்று பிற்பகல் அறிந்துகொள்ள முடியும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...