அடுத்த இரு வாரங்களில் கோழி இறைச்சி, முட்டை விலை குறையும்!

Date:

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறையுமென அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாகவே இந்தச் சலுகையை வழங்க முடிவு செய்யத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது.

நீண்ட கலந்துரையாடலை தொடர்ந்து, தேவையான கால்நடை உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவும் விலையை குறைக்கவும் அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியது. கால்நடை உணவுகள் குறைந்த விலையில் கிடைத்தால், அந்த நன்மை மக்களுக்கே கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இதன்படி, சிறிய...