கொட்டக்கலையில் ரணில்! தலவாக்கலையில் சஜித்!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டக்கலை மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளார்.

இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ளார்.

கொட்டக்கலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தின கூட்டத்தில் அதிகளவான மலையக மக்கள் பங்கேற்க உள்ளதாகவும் அங்கு மே தின கூட்டம் மற்றும் பேரணி இடம்பெறும் எனவும் செந்தில் தொண்டமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொட்டக்கலை நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி கொழும்பில் நடைபெற உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொழிலாளர் தேசிய சங்கம் தலவாக்கலையில் ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டத்தில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்க உள்ளார்.

அந்த கூட்டத்தின் பின் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள மே தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...