இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதட்டங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்குச் சொந்தமான மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் அதன் வான்வெளியை மூட இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியாவுக்குச் சொந்தமான மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் தனது வான்வெளியை மூட நடவடிக்கை எடுத்தது.