மடுல்சீமை மக்களிடம் சஜித் மன்னிப்பு கோரவேண்டும் ; வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மடுல்சீமைக்கு வந்து எமது மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமே கட்சியுடன் செயல்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், சஜித் பிரேமதாச மன்னிப்புக் கோராவிட்டால், ஐக்கிய மக்கள் சக்திகியிலிருந்து வெளியேறுவேன் எனவும் எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மடுல்சீமையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருவதாக உறுதியளித்தும் வரவில்லை. எமது மக்களை அவர் புறக்கணிக்க முடியாது. சஜித் பிரேமதாச இங்கு வந்து மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நான் இனி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...