மடுல்சீமை மக்களிடம் சஜித் மன்னிப்பு கோரவேண்டும் ; வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மடுல்சீமைக்கு வந்து எமது மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமே கட்சியுடன் செயல்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், சஜித் பிரேமதாச மன்னிப்புக் கோராவிட்டால், ஐக்கிய மக்கள் சக்திகியிலிருந்து வெளியேறுவேன் எனவும் எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மடுல்சீமையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருவதாக உறுதியளித்தும் வரவில்லை. எமது மக்களை அவர் புறக்கணிக்க முடியாது. சஜித் பிரேமதாச இங்கு வந்து மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நான் இனி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...