விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்

Date:

உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

கிறிஸ்தவம், நடனமும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

மேலைத்தேய சங்கீதம், சித்திரம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் விரைவாக இணைந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமையினால், விடைத்தாள் மதிப்பீட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இதுவரை கலந்துகொள்ளவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...