ரயில் – ஆட்டோ மோதி விபத்து, இரு மாணவர்கள் உட்பட மூவர் பலி!

Date:

வெலிகமை – பெலேன ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

நேற்று பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பணித்துக்கொண்டிருந்த ரயிலில் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் பயணித்துள்ளார். விபத்தின் போது 9 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகளும் முச்சக்கரவண்டியின் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, 12 வயது பிள்ளையும் அவரது தாயும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிகம மோதரவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா முக்கிய அறிவிப்பு

எல்லை நிர்ணயச் செயல்பாட்டில் உள்ள பல சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத்...

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...