நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பொலிஸார் பலாத்காரமாக இழுத்துச் சென்றனர்!

0
304

இலங்கை பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற நுழைவு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரையே பொலிஸார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here