பிரதமர் பதவியை கேட்கிறார் பசில் ராஜபக்ஷ

Date:

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள கூறுகின்றன.

இதற்கு முன்னர், தனக்கு இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அதற்கு பதில் கிடைக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதி சபாநாயகர் பதவி தொடர்பான வாக்கெடுப்பின் போது பொதுஜன பெரமுன மற்றும் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த அணினர் இணைந்து வாக்களித்தனர்.

ஆளும் தரப்பின் சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட ரஞ்சித் சியம்பாலப்பிட்டியவுக்கு 148 வாக்குகள் கிடைத்தன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி முற்றாக பசில் ராஜபக்சவின் அரசியல் வெற்றியென பொதுஜன பெரமுனவின் பசில் ஆதரவாளர்களின் நிலைப்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.இதனடிப்படையில், சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த 39 பேரை கழித்தாலும் 109 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில் ராஜபக்சவுக்கு வெளிக்காட்ட முடிந்துள்ளது.

அத்துடன் சுயாதீன அணியை சேர்ந்த 39 பேரில் பெரும்பாலானோரை பசில் தரப்புக்கு ஆதரவாக திருப்புவது பெரிய காரியமல்ல எனவும் பசில் ராஜபக்ச ஆதரவாளர் கருதுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...