சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில்

0
56

மே 9ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் மே 09 ஆம் திகதி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

மே 13 மத்திய மாகாணத்தில் , மே 14 சப்ரகமுவ மாகாணத்தில், மே 15 வடமேற்கு மாகாணத்தில் , மே 16 தென் மாகாணத்தில் , மே 20 ஊவா மாகாணத்தில் , மே 21 ஆகிய திகதிகளில் அந்தந்த மாகாணங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் இந்த வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here