கரு ஜயசூரியவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கம் அமைக்க பலரும் இணக்கம்!

Date:

தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிப்பதற்கு பல பிரதான கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த 13 யோசனைகளுக்கு அமைய தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (07) தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று காலை முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி நேற்று பிற்பகல் கூடிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரேரணைக்கு அமைய தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நீண்ட நேரம் கலந்துரையாடி இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் என்பதால் பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதற்கு கரு ஜயசூரியவே பொருத்தமானவர் என ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் உள்ளிட்ட பல முக்கிய தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இலங்கை தற்போது அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நேரத்தில் சர்வதேச ஆதரவு மிகவும் முக்கியமானது மற்றும் 20 மில்லியன் மக்களின் தலைவிதி அதை சார்ந்துள்ளது.

எனவே, இந்த சவாலை எதிர்கொள்ள இலங்கை இணைந்து செயற்படுவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் தற்போது கரு ஜயசூரிய சிறந்த தெரிவு என்பதை பல தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கரு ஜயசூரியவை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க பதவி விலக முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...