அஹுங்கல்ல பகுதியில் மேலும் ஒருவர் சுட்டுக் கொலை

0
134
Shooting from a pistol. Reloading the gun. The man is aiming at the target

அஹுங்கல்ல, மருதானை பகுதியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இவர் தனது வீட்டின் முற்றத்தில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் (08) அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here