பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Date:

உயர்தர விடைத்தாள்களின் மதிப்பீட்டை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது.

இதுவரை 2 பாடங்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

ஏனைய 6 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 10 நிலையங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விடைத்தாள் மதிப்பீட்டின் போது நடைமுறைப் பரீட்சைகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான மதிப்பீடுகள் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக தாமதமானது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...