போராட்டக்காரர்களுக்கு முறையற்று பிறக்கும் குழந்தைகளை ரயில் நிலையங்களில் கைவிடுகின்றனர்!

Date:

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தமது முறையற்ற பிள்ளைகளை புகையிரத பாதையில் விட்டுச் செல்வதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அபிவிருத்தி அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

”போராட்டக்காரர்கள் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர். இதனால் தேவையற்ற குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் தமது பிள்ளைகளை புகையிரத தண்டவாளத்தில் வீசி செல்கின்றனர்.

அரச நிறுவனங்களிலும் போராட்ட குழுவின் உறுப்பினர்கள் இருந்தனர். இன்னொரு போராட்டத்தை தொடங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் அரசை சீர்குலைக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒரு அரசை சீர்குலைப்பது என்பது பயங்கரவாதச் செயல்.

தமது அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை சுதந்திரமாகச் செயற்படுவதற்கு தான் எப்போதும் அனுமதிப்பதாகவும், அவற்றுள் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் உதவத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...

கல்பிட்டி கடற்கரையில் ஒரு தொகை ஐஸ்

நேற்று (5) இரவு கல்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்தபோது...