உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118219459.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118215853.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118227891.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118221813.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118231138.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118212461.jpg)
அதன் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்களை அலரிமாளிகைக்கு அழைத்து கலாச்சார உறவுகளை வளர்ப்பது மற்றும் இலங்கையின் 12 தொழில்நுட்பக் கல்லூரிகளுடன் இணைந்து திறன் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பது குறித்தும் கலந்துரையாடினார்.
சமீபத்திய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான கற்றல் ஆய்வகங்களுடன் மையங்களை பொருத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. திட்டத்தின் முதல் கட்டத்தில், வாழும் கலை திறன் பயிற்சி திட்டம் 5000 இளைஞர்களுக்கு வசதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118117591-1024x735.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118121684-1024x623.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118119662-1024x682.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118131926-1024x670.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118141241.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118138720-1024x682.jpg)
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118146040-1.jpg)
அதன் பின்னர் இன்று காலை நுவரெலியா சீதையம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளவென ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நுவரெலியாவிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
![](https://tamil.lankanewsweb.net/wp-content/uploads/2024/05/FB_IMG_1716118240787-768x1024.jpg)
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்கள் திருகோணமலை க்கும் விஜயம் செய்யவுள்ளார்.