டயானா கமகே பிணையில் விடுதலை

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி இரகசிய பொலிஸாரால் சந்தேக நபராக பெயரிடப்பட்ட டயானா கமகே, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றவாசிகள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகவும் தம்மை கைது செய்ய உள்ளதாகவும் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

சந்தேகநபர் குற்றத்தைச் செய்ததாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்ததையடுத்து, அவர் நீதிமன்றில் ஆஜரானார்.

இரகசியப் பொலிஸார் எழுத்துமூல அறிவித்தல் வழங்கியிருந்த போதிலும், நீதிமன்றில் ஆஜராகிய டயானாவை நீதவான் தனது உத்தரவைப் பிறப்பித்து சந்தேக நபரை பிணையில் அனுப்பினார்.

5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல உத்தரவிட்ட நீதவான், தரப்பினருக்கும் சட்டத்தரணிகளுக்கும் பாதகமான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என சந்தேக நபரை கடுமையாக எச்சரித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...

தங்கம் விலை மீண்டும் உயர்வு

இலங்கையில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை (24)  விலையுடன் ஒப்பிடும்போது செவ்வாய்க்கிழமை(25) நிலவரப்படி...

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி இலஞ்சம்...

ஊர்காவற்றுறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபை...