கொலை செய்யப்பட்ட ராஜகுமாரிக்கு நீதிக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு

Date:

திரைப்பட கலைஞர், கோடீஸ்வர வர்த்தகர் சுதர்மா நெத்திகுமார வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த நிலையில் கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த பதுளை ராஜகுமாரிக்கு நீதிக் கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

R. ராஜகுமாரியின் கொலையாளிகளை வெளிப்படுத்து! விசாரணையை விரைவுபடுத்துங்கள்! ஆர்.ராஜகுமாரிக்கு நீதி!வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான சட்டத்தை அமுலாக்கு போன்ற பதாகைகளுடன் இன்று (24) பிற்பகல் கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டமொன்று இடம்பெற்றது.

கடந்த 11ஆம் திகதி தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் ஆர்.ராஜகுமாரி என்ற பெண் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளின் போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் நடத்திய தாக்குதலில் இவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. பணிபுரிந்த வீட்டிலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...