கருத்துச் சுதந்திரத்தில் இலங்கை முன்னேற்றம்: உலகளாவிய வெளிப்பாடு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது

Date:

கருத்து சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்டுள்ள ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வெளிப்பாடு அறிக்கை (GER) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பிரேசில், தாய்லாந்து, நைஜர் மற்றும் பிஜி ஆகிய நாடுகளுடன் இலங்கையும் அதிக வெளிப்படைத்தன்மையை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள்தொகையில் 50 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கருத்துச் சுதந்திர நெருக்கடியில் வாழ்வதாகவும், சுதந்திரமாக பேச முடியாது என்பதை 2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வெளிப்பாடு அறிக்கை வெளிக்காட்டுகிறது.

இந்த அறிக்கையானது கருத்துச் சுதந்திரத்தின் 25 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, உலகளவில் சுதந்திரமான கருத்து மற்றும் தகவலுக்கான உரிமையின் பகுப்பாய்வை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, உலகளாவிய ரீதியில் 195 நாடுகளில் 161 நாடுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கையில் இலங்கை 94 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...