அரசாங்கத்தினால் 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட எல்.ஆர்.சி காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்கள் மற்றும் வாரிசுகளுக்கே வழங்குவதற்கான அறிவித்தலை ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டு அரசினால் கொண்டு வரப்பட்ட காணி உச்ச வரம்பு சட்டத்தின் பிரகாரம் சுவீகரிக்கப்பட்டு தற்போது காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆளுகைக்கு அரசாங்கத்தினால் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதன் உரிமையாளர்கள் அல்லது வாரிசுகள் 31/05/2023ற்கு முன்னர் அந்த காணிகளிற்கு விண்ணப்பித்து முன்னோரிடமிருந்து பெறப்பட்ட சகல காணிகளையோ அல்லது அதற்கு பதிலாக வேறொரு காணியையோ மீளப் பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பான மேலதிக தகவல் மற்றும் விண்ணப்பம் போன்றவை மூன்று மொழிகளிலும் ஆணைக்குழுவின் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.