வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த துமிந்த சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை

Date:

வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை துமிந்த சில்வாவைவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்திய உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்யுமாறு நேற்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உதவுமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதனை தவிர உயர் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கியும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...